குழந்தை வரம் கிடைக்க இந்த எளிய பரிகாரத்தை செய்து வாருங்கள்..!

Default Image

ஒவ்வொரு தம்பதிக்கும் பிறக்கும் குழந்தைகள் தான் அந்த குடும்பத்தின் அடுத்த வாரிசாக கருதப்படுகிறது. திருமணம் நடந்து முடிந்த உடனே அனைவரும் எதிர்பார்ப்பது அவர்களிடம் இருந்து குடும்ப வாரிசை தான். ஆனால் ஒரு சிலருக்கு இந்த குழந்தை பாக்கியம் சிறிது காலம் தள்ளிப் போகிறது. இது பல்வேறு பிரச்சனைகளையும் உருவாக்கி வரும். முக்கியமாக கணவன் மனைவி இருவரிடையே மனக்கசப்புகளும் ஏற்படுகின்றன. அதனால் இந்த எளிய பரிகாரத்தை வீட்டில் செய்து வாருங்கள். நீங்கள் எதிர்பார்த்த படி குழந்தை வரன் கிட்டும். இதற்கு முதலில் சதுரவடிவ மஞ்சள் துணியை எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில் 3 ஜாதிக்காய்களை வைத்து அதனுடன் ஒரு பேப்பரில் குழந்தை வரம் வேண்டும் என்று எழுதி அதனுடன் வைத்து கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் மஞ்சள் நிற நூல் கொண்டு கட்டி அந்த மஞ்சள் பையை பூஜை அறையில் முருகன் அருகில் வைத்து, குழந்தை வரன் வேண்டும் என்று மனதார வேண்டி கொள்ளுங்கள். நிச்சயமாக விரைவிலேயே உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஜாதிக்காய்க்கு இருக்க கூடிய சிறப்பம்சமே அதனுடன் வைத்துள்ள பொருளை பெறுக செய்வது. தங்கத்தை அதனுடன் சேர்த்து வைத்தீர்கள் என்றால் வீட்டில் தங்கம் பெறுக ஆரம்பிக்கும். அதனால் இந்த பரிகாரத்தை வீட்டில் சஷ்டி அன்று அல்லது செவ்வாய் கிழமை அன்று செய்து நன்மை பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K