விவசாயி ஆன தேவயானி.! குவியும் வாழ்த்துக்கள்.!

நடிகை தேவயானி செய்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் 1990-களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் தேவயானி. இவரது நடிப்பில் வெளியான காதல் கோட்டை, நீ வருவாய் என, சூரிய வம்சம், கிரி, ஆகிய திரைப்படங்கள் மறக்கமுடியாத ஒன்றாக தான் இருக்கிறது.
கடந்த 2001-ஆம் ஆண்டு இவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ராஜகுமாரனின் சொந்த ஊருக்கு அருகேயுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் அவரும் அவரது மனைவி தேவையானியும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள்.
இவர்களது தோட்டத்துக்கு அருகே ஒருவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்காக பிளாட்டுகளாக மாற்றியுள்ளார். இதனை அறிந்த, தேவயானி அவரிடம் பேசி அந்த 2 ஏக்கர் நிலத்தை பணம் கொடுத்து வாங்கி, பின்அதை விவசாய நிலமாக மாற்றி, தற்போது 2 ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார்.
அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இயற்கை விவசாயியாக மாறியதுடன் மட்டுமில்லாமல், தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றியதற்காக தேவயானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025