பிலிப்பைன்ஸ் இராணுவ அதிகாரியை தாக்கிய கொரோனா!

கொரோனா பாதிப்பு முதலில் சீனாவில் தொடங்கி, தற்போது பல நாடுகளை தாக்கி வருகிற நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில், 707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தாக்கிய ஒரு ராணுவ அதிகாரியை, பிலிப்பைன்ஸ் நாட்டில் இராணுவ தளபதி, பெலிமோன் சான்டோஸ் ஜூனியர் சந்தித்துள்ளார். இதனையடுத்து, இவர் 4 நாட்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இருப்பினும் இவருக்கு தற்போது, கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா உறுதி ஆனபோதிலும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவில்லை. அவர் குடியிருக்கும் ராணுவ குடியிருப்பிலேயே அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர் அங்கிருந்தே தனது பணிகளை கவனிப்பார் என்று பிலிப்பைன்ஸ் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!
June 27, 2025
”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!
June 27, 2025