பேஸ்புக் CEO மார்க்கின் சொத்து மதிப்பு தற்போது 30 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 87.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸானது, தொடர்ந்து உலக நாடுகளை தாக்கி வருகிறது. இந்நிலையில், அனைத்து நாடுகளிலேயும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஊரடங்கு அமலில் இருப்பதால் அணைத்து நிறுவங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் தங்களது வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகிறார்கள்.அந்த வகையில் சமூக வலையதளங்கள் தற்போது செம்ம ஆக்டிவாக உள்ளது.
இந்நிலையில் பேஸ்புக் CEO மார்க்கின் சொத்து மதிப்பு 45 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.மேலும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 30 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 57.5 பில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு தற்போது 87.5 பில்லியன் டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இவருடைய சொத்து மதிப்பு ரூ.6,65,63,43,750.00 ஆகும்.
அந்நிறுவனம் புதியதாக 50 பேர் வரை வீடியோ அழைப்பில் பேசும் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…