அமெரிக்காவில் ஒரே நாளில் 32,165 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு, ஒரே நாளில் 2,535 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
சீனா உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டை விட்டு தற்போது விலகியுள்ளது. ஆனால் அங்கு ஆரம்பித்த வைரஸ் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேகமாக பரவி உயிர்களை கொன்று குவித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பும், உயிரிழப்பும் உலகளவில் பெரும் உச்சத்தை தொட்டுள்ளது. உலக முழுவதும் இதுவரை கொரோனாவால் 22,50,790 பேர் பாதிக்கப்பட்டு, 1,54,266 பேரை கொன்றுள்ளது. இதில் அமெரிக்காவில் தான் அதிகப்படியாக தாக்கியுள்ளது.
அமெரிக்காவில் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அதிபர் ட்ரம்ப். ஆனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு தினந்தோறும் பலமடங்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 32,165 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 7,10,021 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரே நாளில் 2,535 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் அங்கு பலி எண்ணிக்கை 37,158 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…