வாணி ராணி சீரியலில் நடிக்கும் நவ்யா சுவாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .அதில் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அடங்கும்.சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல சீரியல் நடிகை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழில் வாணி ராணி, அரண்மனை கிளி உள்ளிட்ட பல சீரியல்களிலும், தெலுங்கிலும் பல சீரியல்களில் நடித்து வருபவர் நவ்யா சுவாமி. சமீபத்தில் இவர் தெலுங்கு சீரியல் ஒன்றிற்காக படப்பிடிப்பிற்கு சென்ற போது உடல்நல குறைவு ஏற்ப்பட்டதை அடுத்து கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அவர் படப்பிடிப்பிற்கு செல்வதை நிறுத்தி விட்டு தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்த அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது மட்டுமில்லாமல் தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…