கென்யாவில் கொரோனா பரவல் எதிரொலி…. 4 இலட்சத்து 7ஆயிரம் அகதிகள் இருப்பிடங்களை விட்டு வெளியேற தடை…

Default Image
கடந்த 20 ஆண்டுகளில் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த  4 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் தற்போது வரை கென்யாவில் தஞ்சம் புகுந்து வசித்து வருகின்றனர். இவ்வாறு தஞ்சம் புகுந்த 4 இலட்சத்துக்கும் அதிகமான அகதிகள்  இரண்டு பெரிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கென்யா நாட்டில் தற்போது கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதுவரை கென்யாவில் 390க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அகதிகள் உள்ள  முகாம்களில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கென்யாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் இரண்டாயிரம் அகதிகளை மட்டுமே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க  முடியும். மேலும்  110 பேருக்கு மட்டுமே அவசர சிகிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகள் உள்ளன. இதனால் இந்த முகாம்களில் உள்ள 4 லட்சத்து 7 ஆயிரம் அகதிகளும் தங்களது வசிப்பிடத்தில் இருந்து வெளியேறக் கூடாது என்று கென்ய உள்துறை மந்திரி பிரெட் மடியாங்கி தடைவிதித்து  உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கென்யாவில், கடந்த 22-ந் தேதி முதல் 3 வார காலத்திற்கு பகுதி நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07052025
Operation Sindoor
Pakistan PM Shehbaz sharif say about Operation Sindoor
Operation Sindoor
MIvsGT - ipl
MK stalin
MI vs GT