பிரேசிலிலிருந்து வந்த பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா வைரஸ் – சீனா எச்சரிக்கை!

Published by
Rebekal

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சீனாவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு சீனாவில் உள்ள வுஹான் நகரில் உருவாகி பரவ ஆரம்பித்த கொரானா வைரஸ் தற்போது உலக நாடுகளை எல்லாம் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது சீனாவின் ஷென்ஷென் எனும் நகரில் பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை சோதித்து பார்த்தபோது அதில் கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கோழி இறைச்சி பிரேசில் நாட்டின் தென் மாகாணமான அரோரா அலிமென்டோசில்  எனும் ஆலையில் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக ஷென்ஷென் நகர மக்கள் இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு  உள்ளூர் அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுபற்றி அரசு தரப்பில் கூறும்போது, இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நீர்வாழ் பொருட்களை வாங்கும்பொழுது நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே சீனாவின் பிற நகரங்களில் இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளின் பேக்கேஜ் மேற்பரப்பில் கொரானா வைரஸ் தொற்று இருந்ததாக தகவல் வெளியாகியது, இந்நிலையில் தற்பொழுது ஷென்ஷென் நகரில் வெளியாகியுள்ள இந்த தகவல் மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…

45 minutes ago

தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…

1 hour ago

பான் கார்டு விண்ணப்பம் செய்யணுமா? அப்போ ஆதார் கட்டாயம்…மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…

2 hours ago

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

வாஷிங்டன் :  அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…

3 hours ago

அடிச்சா அடி இடிச்சா இடி…சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!

இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…

3 hours ago

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

3 hours ago