கோரத்தாண்டவம் ஆடும் கொவிட்-19.! 2,048 பேருக்கு புதிதாக இந்த வைரஸ் இருப்பது உறுதி.!

- உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ் சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்றிய தினம் சற்று குறைந்துள்ளது.
உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ், சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது. இதனால் அந்நாட்டில் பல கட்டுப்பாடுகளை சீனா அரசு விதித்துள்ளது.
இந்நிலையில் கொவிட்-19 வைரசால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த வைரசால் நேற்று( ஞாயிற்றுக்கிழமை) உயிரிழப்பின் எண்ணிக்கை 1770-ஐ எட்டியுள்ளது. அதில் 105 பேர் நேற்று மட்டும் பலியாகியுள்ளனர். இது முந்தையவிட சற்று குறைத்துள்ளது என குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குறைந்தது 100 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2,048 பேருக்கு புதிதாக இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஹூபேயில் இருந்து மட்டும் 1,933 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வைரசால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,548-ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025