டெல்லி:”என் அம்மாவுக்கு ரொம்ப சீரியஸா இருக்கு;ஆக்சிஜன் தாருங்கள்”..! என்று மண்டியிட்டு கேட்கும் பெண்..!

Published by
Edison

“என் அம்மாவுக்கு ரொம்ப சீரியஸா இருக்கு,ஆக்சிஜன் இருந்தா தாருங்கள்” என்று ஒரு பெண் மண்டியிட்டு தனது தாயின் உயிரை காப்பாற்றுவதற்காக ஆக்ஸிஜன் சிலிண்டரை தருமாறு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால்,நாட்டில் உள்ள பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால்,ஆக்சிஜன் நிரப்பும் இடங்களுக்கே சென்று மணிக்கணக்காக வரிசையில் காத்திருந்து ஆக்சிஜன் வாங்கும் நிலைக்கு கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,டெல்லியில் வசிக்கும் ஸ்ருதி சஹா என்ற பெண்,தனது தாய்க்கு கொரோனா பாதிப்பின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் டெல்லியின் இண்டஸ்ட்ரியல் பகுதிகளில் உள்ள ஆக்சிஜன் நிரப்பும் மையத்திற்கு வெளியே இருந்த காவலர்களிடம்,”உடனடியாக ஆலையை திறந்து விடுங்கள்,ஏனெனில்,என் அம்மா மிகவும் ரொம்ப சீரியஸாக உள்ளார்.ஆக்சிஜன் கிடைத்தால்தான் என் அம்மாவை காப்பாற்ற முடியும்” என்று மண்டியிட்டுக் கேட்டுள்ளார்.

இதனையடுத்து,சிறிது நேரம் கழித்து வந்த போன் காலில் ஸ்ருதியின் அம்மா இறந்துவிட்டதாக தகவல் வந்தது.இந்த செய்தியைக் கேட்டதும் ஸ்ருதி மனமுடைந்துப் போய் கதறி அழுதார்.இதைப்பார்த்துக் கொண்டிருந்த சிலர் ஸ்ருதியை ஆறுதல் படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும்,இதுமாதிரியான சம்பவம் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.எனவே,ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்ய மத்திய அரசு மேற்கொண்டு கூடுதல் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Published by
Edison

Recent Posts

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

1 hour ago

தவெக போராட்டத்தில் தொண்டர்கள் அடுத்தடுத்த மயக்கம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…

1 hour ago

டெல்லியில் குடி போதையில் கார் ஏற்றி 5 பேரை கொலை செய்த நபர் கைது.!

டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…

2 hours ago

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார் குடியரசுத் தலைவர்.!

டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…

3 hours ago

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து – உதவி எண்கள் அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…

3 hours ago

”வெற்று விளம்பர திமுக, இப்போ ‘Sorry மா’ மாடல் ஆட்சியாக மாறிவிட்டது” – கடுமையாகச் சாடிய விஜய்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…

4 hours ago