அமெரிக்காவில், 2 பயணிகள் விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்து, விமான நிறுவன ஊழியர்களுன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புறப்பட்ட இடத்திற்கே விமானம் திருப்பி கொண்டுவரப்பட்டது.
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்ற பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் டெல்டா தனியார் விமான சேவை நிறுவனமானது, தங்களது விமானத்திலும், விமான நிலையத்திலும் பயணிகள், ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிவதை தீவிரமாக கடைபிடித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டிட்ரோய்ட் நகரிலிருந்து ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லான்டா நகருக்கு 23 ஆம் தேதி டெல்டா விமானம் புறப்பட்டது.
அதில் பயணித்த 2 பயணிகள் விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்து, விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து, விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புறப்பட்ட டிட்ரோய்ட் நகருக்கே விமானம் திருப்பி கொண்டுவரப்பட்டது. அங்கு அந்த 2 பயணிகளை கிழே இறக்கிவிட்டு, விமானம் அட்லான்டா நகருக்கு புறப்பட்டு சென்றது. இதனை அந்த விமான நிறுவன செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…