அமெரிக்காவில், 2 பயணிகள் விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்து, விமான நிறுவன ஊழியர்களுன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புறப்பட்ட இடத்திற்கே விமானம் திருப்பி கொண்டுவரப்பட்டது.
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்ற பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் டெல்டா தனியார் விமான சேவை நிறுவனமானது, தங்களது விமானத்திலும், விமான நிலையத்திலும் பயணிகள், ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிவதை தீவிரமாக கடைபிடித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டிட்ரோய்ட் நகரிலிருந்து ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லான்டா நகருக்கு 23 ஆம் தேதி டெல்டா விமானம் புறப்பட்டது.
அதில் பயணித்த 2 பயணிகள் விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்து, விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து, விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புறப்பட்ட டிட்ரோய்ட் நகருக்கே விமானம் திருப்பி கொண்டுவரப்பட்டது. அங்கு அந்த 2 பயணிகளை கிழே இறக்கிவிட்டு, விமானம் அட்லான்டா நகருக்கு புறப்பட்டு சென்றது. இதனை அந்த விமான நிறுவன செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…