இந்தியை எதிர்த்து தமிழ் திரையுலக பிரபலங்களின் டீசர்ட் புகைப்படங்கள்.!

Published by
Ragi

இந்தி எதிர்ப்பு வாசகஙகளுடன் தமிழ் திரையுலக பிரபலங்கள் டீசர்ட்டை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தி எதிர்ப்பு கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வப்போது இந்தி எதிர்ப்பு போராட்டங்களும், இந்தி திணிப்பு போராட்டங்களும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியிடம் இந்தியராக இருந்து விட்டு இந்தி தெரியாத என்ற கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்தி தெரியாத மருத்துவர்களை ஆயுஷ் அமைச்சகம் நடத்திய கூட்டத்தில் வெளியேற சொன்னதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் இந்தி எதிர்ப்பு வாசகங்களுடன் கூடிய டீசர்ட்களை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா ‘I am a தமிழ் பேசும் Indian’ என்ற வாசகத்துடன் கூடிய டீசர்ட்டையும், அவரது அருகில் மெட்ரோ படத்தில் நடித்த ஸ்ரீரிஷ் ‘இந்தி தெரியாது போடா’ என்ற டீசர்ட்டையும் அணிந்துள்ளார். மேலும் இதே வாசகஙகளுடன் நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகியும்,நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களும் டீசர்ட்டை அணிந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

11 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

24 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago