அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

கொரோனா நோய்த்தொற்றுக்கு உருவாக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தான் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது.தற்போதைய நிலவரப்படி அங்கு 43,68,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.1,50,199 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.எனவே தேசிய சுகாதார நிறுவனம் (என்ஐஎச்)வெளியிட்ட செய்திக்குறிப்பில், அமெரிக்க விஞ்ஞானிகள் பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னாவால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையைத் தொடங்கியுள்ளனர்.கொரோனா இல்லாத சுமார் 30,000 தன்னார்வலர்களின் பங்கேற்புடன் பல அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி தளங்களில் இந்த சோதனையை நடத்த தேசிய சுகாதார நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில்,கொரோனா சிகிச்சை முறைகளைப் பொறுத்தவரை, அடுத்த இரண்டு வாரங்களில் மிகச் சிறந்த விஷயங்களை நாங்கள் கூறுவோம்.அது குறித்து சில அறிவிப்புகளை நாங்கள் பெற்றவுடன் அறிவிப்போம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025