அதிபர் வேட்பாளருக்கான தேர்தல்.. டொனால்ட் ட்ரம்புக்கு முதல் வெற்றி!

Published by
பாலா கலியமூர்த்தி

குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதுபோன்று, அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவித்தார். அதேவேளையில், குடியரசு கட்சி சார்பில் விவேக் ராமசாமி, ரான் டி சான்டிஸ், கரோலினா மாநில கவர்னர் நிக்கி ஹாலே ஆகியோரும் போட்டியிடுவதாக அறிவித்தனர். இதனால் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவது யார்? என்பதற்கான தேர்தல் நடத்தப்படும் நிலை ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல்…மேலும் ஒரு வேட்பாளர் விலகல்…!

இதற்காக நான்கு பேரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், டொனால்டு டிரம்புக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என விவேக் ராமசாமி அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் இருந்து விலகினார். பின்னர், தேர்தல் பிரச்சாரம் ஈடுபடாததால் ரான் டி சான்டிஸும் விலகுவதாக அறிவித்தார். இறுதியாக, டொனால்டு டிரம்ப் மற்றும் நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவியது.

இந்த நிலையில், நியூ ஹாம்சயர் மாநிலத்தில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்முலம் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிட இருக்கும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு, இது முதல் வெற்றியாக அமைந்துள்ளது. அதேசமயத்தில், அவரை எதிர்த்து அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தெற்கு கரோலினா முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Recent Posts

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

3 minutes ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

9 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago