பிரார்த்தனை கூடமாக மாறிய வாகனம் நிறுத்தும் இடம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சில நாடுகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில நாடுகளில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது.
இந்நிலையில், வெனிசுலாவில் கொரோனா எதிரொலியால், தேவாலயங்கள் திறக்க, அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து, அந்நாட்டு மக்களுக்கு, டிரைவ் இன் பிரார்த்னைகள் அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலாக இருந்து வருகிறது.
அந்த வகையில், தேவாலயத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தை பிரார்த்தனை கூடமாக மாற்றி, அந்த இடத்தில் பிரார்த்தனை நடத்தி வருகிறார் பாதிரியார் ஜோனாதன். இந்த வாகனம் நிறுத்தும் இடத்தில், 30 கார்கள் மட்டுமே நிறுத்த முடியும் என்பதால், ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பிரார்த்தனையில் கலந்து கொண்ட மக்கள் கூறுகையில், ஏழு மாட்டாஹங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் காரில் அமர்ந்தபடியே பிரார்த்தனையில் ஈடுபடுவது, மனநிறைவாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…