ட்விட்டர் குழுவில் சேர மறுத்த எலான் மஸ்க் – CEO பராக் அகர்வால் தகவல்

Published by
Edison

எலான் மஸ்க்,ட்விட்டர் இயக்குநர்கள் குழுவில் சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார் என ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரரும்,டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க்,பிரபல முன்னணி சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரில் 9.2% பங்குகளை வாங்கியதையடுத்து, ட்விட்டரின் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக எலான் மஸ்க் விளங்குகிறார்.எனவே,அவரை ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இணைப்பதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில்,எலான் மஸ்க்,ட்விட்டர் குழுவில் சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்:”எலான் ட்விட்டர் குழுவில் சேர்வது பற்றியும்,எலோனுடன் நேரடியாகவும் பல விவாதங்கள் நடத்தினோம்.எலானை நிறுவனத்தின் நம்பிக்கையாளராக வைத்திருப்பது,அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்களைப் போலவே, நிறுவனம் மற்றும் எங்கள் பங்குதாரர்கள் அனைவரின் நலன்களுக்காகவும் செயல்பட வேண்டும் என்றும்,இது சிறந்த முன்னோக்கிய பாதை என்றும் நாங்கள் நம்பினோம்.இதனால்,ட்விட்டர் வாரியம் அவருக்கு ஒரு தனி இடத்தை வழங்கியது.

ஆனால்,இனி ட்விட்டர் குழுவில் சேரப் போவதில்லை என்று எலான் பகிர்ந்து கொண்டார்.எங்கள் வாரியத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்கள் பங்குதாரர்களிடமிருந்து உள்ளீட்டை நாங்கள் எப்போதும் மதிப்போம்.நாம் எடுக்கும் முடிவுகளும்,அதை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது,வேறு யாருடையது அல்ல.பேச்சை குறைப்போம்,வேலை மற்றும் என்ன உருவாக்குகிறோம் என்பதில் கவனம் செலுத்துவோம்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

3 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

6 hours ago