இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிறப்பிப்பு…!

Published by
Rebekal

உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பொருளாதார அவசரநிலையை பிறப்பித்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரம் சற்று சிக்கலை சந்தித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில வருடமாக கொரோனா பரவல் காரணமாக நாட்டின் வருவாய் துறையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அன்னிய செலவாணி இருப்பு குறைந்து, இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மேலும் பொருட்களின் இருப்பு குறைவாக இருப்பதாலும், பதுக்கல் அதிகரித்து இருப்பதாலும் நாட்டில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. எனவே அவற்றின் விலையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பதுக்கலை தடுக்கவும், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வரவும் தற்பொழுது இலங்கையில் பொருளாதார அவசர நிலையை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.

இதன் மூலமாக அரிசி, சர்க்கரை போன்ற முக்கிய உணவுப் பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே…

1 minute ago

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

35 minutes ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

1 hour ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

1 hour ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

2 hours ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

2 hours ago