பிரபல இந்திய நடிகர் அனுபம் ஷியாம் உறுப்பு செயலிழப்பால் காலமானார்…!

Published by
Rebekal

பிரபல இந்திய நடிகர் அனுபம் ஷியாம் உறுப்பு செயலிழப்பு காரணமாக நேற்றிரவு மரணமடைந்துள்ளார்.

இந்தியாவின் மிக பிரபலமான நடிகர் தான் அனுபம் ஷியாம். இவர் முதல்வன் படத்தின் இந்தி ரீமேக் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த எதிர்மறையான கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகருக்கான இந்தியன் டெலி விருது பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதமே இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின் இவருக்கு அங்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சில நடிகர்கள் உதவியதாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது அவரது சிறுநீரகத்தில் தொற்று இருந்ததாகவும்,  மீண்டும் ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது. அதன் பின் இவர் குணமடைய தொடங்கியுள்ளார். ஆனால், நேற்றிரவு இவர் உடல் உள்ளுறுப்பு செயலிழப்பால் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அவரது நண்பர் யஷ்பால் சர்மா அவர்கள் கூறுகையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பதாக இவர் உடல் உள்ளுறுப்பு செயலிழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அனுபம் ஷியாம் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

6 hours ago