ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெள்ளநீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்துகொண்டது. நேற்றிரவு பெய்த மழை காரணத்தால் ரைன்லேண்ட்-பேலட்டினேட் என்ற நகரில் உள்ள ஸ்கல்டு பகுதியில் இருக்கும் 6 குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
மேலும், 25 வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த வெள்ளப்பாதிப்பால் அப்பகுதியில் 30 பேர் காணாமல் போய் உள்ளனர். மேலும், இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை 2 தீயணைப்பு வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த இடத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் காவல்துறையினருடன் தற்போது ஜெர்மனியின் ராணுவ வீரர்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…