Spain Balearic Islands Hotel Accident [Image source : AP]
சென்னை: ஸ்பெயின் பலேரிக் தீவில் நேற்று நள்ளிரவு உணவக கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் பலேரிக் தீவு பகுதியில் பால்மா டி மல்லோர்கா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள 2 மாடி ஹோட்டல் கட்டிடம் நேற்று இரவு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து செய்தி அறிந்த உடன், உள்ளூர் காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த கட்டிட விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும், அதில் 7 பேர் படுகாயங்களுடன் பால்மாவில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் உள்ளூர் செய்திசேனல் வாயிலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த விபத்தானது, அதிக நபர்கள் ஹோட்டல் மொட்டை மாடியில் இருந்ததாகவும், அதன் காரணமாக பாரம் தாங்காமல் ஹோட்டல் கட்டிடம் இடிந்து விழுந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை மீட்புப்படையினர் தேடி வருகின்றனர்.
பால்மா கடற்கரையில் ஏற்பட்ட பயங்கர விபத்து குறித்து எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்றும், மீட்பு நடவடிக்கைகளை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…