சின்னத்திரை நடிகை சித்ராவின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில் அவருக்கு வழி முழுவதும் ரசிகர்கள் கூட்டமாக கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் வெளியான அறிக்கையில் சித்ராவின் மரணம் தற்கொலை என்று காவல்துறை தெரிவித்துள்ளது .
இதனையடுத்து அவரின் உடல் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இறுதி சடங்குகள் நடைபெற்றது .இதில் ரசிகர்கள்,ஊர் பொதுமக்கள் என பலர் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். இவரது இறுதி ஊர்வலம் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த இறுதி ஊர்வலத்தில் சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் என பலர் கதறி அழுது கொண்டே பங்கேற்று வருகின்றனர் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையோரம் நின்று சித்ராவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இவரின் இறுதி ஊர்வலத்தில் கூட்டம் அலை மோதும் கால் போலீசார் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .இவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது .
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…