சூப்பர் ஸ்டார், தளபதி என் படத்தில் நடிக்காததற்கு காரணம் இதுதான் – கௌதம் மேனன்.!

Default Image

தமிழ் சினிமாவில் உச்ச நட்சித்திரமாக இருப்பவர்கள் ரஜினி, விஜய், அஜித் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இவர்கள் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் மிகவும் சிறப்பாக வெற்றி பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்து பல சாதனைகளை படைக்கும். இவர்களை வைத்து படங்களை இயக்க பல இயக்குனர்கள் காத்துள்ள நிலையில், பிரபல இயக்குனரான கௌதம் மேனன் அஜித்தை வைத்து என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தை இயக்கிவிட்டார். அதைபோல் விஜய்யை வைத்து யோகன் என்ற படத்தை இயக்க திட்டமிட்டுருந்தார் ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படம் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டது,

இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவரிடம் ரஜினி மற்றும் விஜய் உங்கள் படங்களில் நடிக்க எதற்காக தயங்குகிறார்கள் என்று கேட்டதற்கு ” அவர்கள் நான் இயக்கும் படத்தில் நடித்தால் அது அவர்கள் படமாக இருக்காது என் படமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் போல என்று கூறியுள்ளார். மேலும் இந்த வருடம் இறுதியில் நடிகர் விஜயை சந்தித்து ஒரு கதை கூறவுள்ளதாகவும் கூறிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்