கோலிசோடா பட இயக்குநரான விஜய் மில்டன் அடுத்ததாக சிவா ராஜ்குமாரை வைத்து கன்னட படத்தினை இயக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரியமுடன், காதல், வழக்கு எண் 18/9 உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பிரபலமானவர் விஜய் மில்டன். அது மட்டுமின்றி கோலிசோடா, 10 எண்றதுக்குள்ள, கடுகு உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது இவரது அடுத்த படத்தினை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம் விஜய் மில்டன் அடுத்ததாக கன்னட படத்தினை இயக்கவுள்ளார்.
அந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவா ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார், இவர்களுடன் தனஞ்செயா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தகவலை நேற்றைய சிவா ராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுவரை பெயரிடப்படாத இந்த படத்தை விஜய் மில்டன் அவர்களின் ராப் நோட் புரொடக்ஷன்ஸ் மற்றும் கிருஷ்ணா சர்தக் தயாரிக்கிறது. மேலும் ஜே .அனூப் சீலின் இசையமைக்கவுள்ள இந்த படம் அடுத்த வருடம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…