கெளதம் வாசுதேவ் மேனனின் அடுத்தடுத்த மெகா பட்ஜெட் திரைப்படங்கள்! புதிய அப்டேட்!

Default Image

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் படமெடுத்து தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் கடைசியாக அச்சம் என்பது மடமையடா எனும் திரைப்படம் தான் வெளியானது. இதனை அடுத்து தற்போது நவம்பர் 29ஆம் தேதி எனை நிக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளது.
எனை நிக்கி பாயும் தோட்டா கோமாளி பட தயாரிப்பாளர் ஐசரி கணேசன் மூலமாக வெளியாக உள்ளது. இதனை அடுத்து, ஐசரி கணேசன் தயாரிக்கும் அடுத்தடுத்த மூன்று படங்களை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளார்.
இதில், முதல் படமாக வருண் நாயகனாக நடிக்க உள்ள ஜோசுவா எனும் படம் அடுத்த வருடம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து, சூர்யாவை வைத்து கெளதம் இயக்க உள்ள படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதற்கடுத்ததாக அனுஸ்காவை வைத்து ஹீரோயின் மையப்படுத்திய ஒரு படத்தையும் கெளதம் வாசுதேவ் மேனன் ஐசரி கணேசன் அவர்கள் தயாரிப்பில் உருவாக்க உள்ளாராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்