கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படம் “கேஜிஎப் 1”. இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தையும் இயக்குனர் பிரசாத் நீர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும். அதைபோல் வரவேற்புக்கு ஏற்றது போல் படத்தின் வசூலும் தாறுமாறாக செய்துள்ளது.
அதன்படி, கேஜிஎப் திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் இந்தியா முழுவதும் 134.5 கோடி வசூல் செய்துள்ளது. இதனை உறுதி படுத்தும் வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும். மேலும், இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…