தனது தாயார் திட்டியதை நினைத்து தன்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை எனவும், அடிக்கடி அதை யோசனையாக இருக்கிறது எனவும் ரம்யா ஷிவானி கூறுகிறார்.
கடந்த 80 நாட்களுக்கும் மேலாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவராக தற்போது வரை வீட்டிற்குள் இருந்து விளையாடிக் கொண்டிருக்கிறார் ஷிவானி. இவரது நடவடிக்கைகள் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த இரு வாரங்கள் மட்டுமே ரசிகர்களுக்கு பிடித்தது. அதன்பின் பாலாஜியிடம் சாய்ந்து அவர் பக்கம் நின்று ஷிவானி பேசுவதுபோல அனைவருக்குமே தோன்றியது. அதேபோல தான் அவரது தாயாருக்கும் தோன்றியுள்ளது போல.
இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் பிரீஸ் டாஸ்குக்காக வந்திருந்த ஷிவானியின் தாயார், அவரை ஒரு கணம் கட்டி அணைத்தாலும் மறுகணம் மிகவும் கோபமாக திட்டிவிட்டார். பாலாஜிக்காகத்தான் நீ விளையாடுகிறாய் என தாயார் மிகவும் திட்டி விட்டார். இவ்வாறு பேசாதே அம்மா பேசாதே என ஷிவானி அழுதாலும் அவரது தாயார் கேட்பதாக இல்லை. இந்நிலையில் அவரது தாயார் வீட்டுக்கு சென்று ரம்யாவிடம் அமர்ந்து பேசும் ஷிவானி, தன்னால் எதையும் ஒரே நிலையில் யோசிக்க முடியவில்லை அம்மா பேசியதுதான் அடிக்கடி நினைவுக்கு வருகிறது. நிம்மதியாகவே இருக்க முடியவில்லை எனக் கூறி அழுகிறார். இதோ அந்த வீடியோ,
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…