எனது நண்பர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு போராடுவதை நான் பார்க்க விரும்பவில்லை.
சீனா நாட்டில் வுகாண் என்ற நகரத்தில் உருவான கொரோனா வைரஸானது 25க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூரமான வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 908 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த நோய்க்கு இதுவரையிலும் எந்த மருத்துவர்களாலும் மருந்து கண்டுபிடிக்க இயலவில்லை. வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அதனை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் இந்த நோய்க்காக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த கொடூர வைரசை தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியம். பலரும் இதனை நம்பியுள்ளனர். அதனால் வைரஸை கட்டுப்படுத்த விரைவில் ஒரு மாற்று மருந்து உருவாக்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
இவ்வாறு தனிநபரோ அல்லது ஒரு அமைப்போ கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடித்தால் அவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் பரிசாக அளிப்பதாக கூறியுள்ளார் இந்த அறிவிப்பு பணத்தைப் பொருட்டாக கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு போராடுவதை நான் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழ வேண்டும் அதற்காக தான் இந்த அறிவிப்பு என்று கூறியுள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…