நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது..?! லேட்டஸ்ட் தகவல்.!

நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
தனுஷ் – செல்வராகவன் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நானே வருவேன் படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது.
இந்த படத்தின் டைட்டில் மற்றும் கதையை இயக்குனர் செல்வராகவன் மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் இதுகுறித்து எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் முடிந்து, செப்டம்பர் மாதம் தொடங்கியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025