இசைஞானி இளையராஜா தனது திரை பயணத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பிரசாத் ஸ்டூடியோவில் அவருக்கென உள்ள அந்த அறையில் தான் தனது இசை கோர்ப்பு பணிகளை செய்து வந்தார். இந்த பிரசாத் ஸ்டூடியோ இளையராஜாவுக்கு சொந்தமானது அல்ல. அது பிரசாத் அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமானது.
இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜா தங்கள் அறையை காலி செய்து தரவேண்டும் எனவும் அதில் வேறு பணிகள் நடைபெற உள்ளது எனவும் பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் கூறப்பட்டது. இதனால் இளையராஜா தரப்பிற்கும் பிரசாத் ஸ்டூடியோ தரப்பிற்கும் பிரச்சனை ஏற்பட்டது. அதில், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சில நாட்களுக்கு முன் இளையராஜாவுக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் பிரசாத் ஸ்டூடியோ சென்றனர் அப்போது அவர்களை பிரசாத் ஸ்டூடியவிற்கு செல்ல விடாமல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதன்பிறகு இளையராஜா தரப்பில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இதில் பதிலளித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் 9ம் தேதி இருதரப்பையும் நீதிமன்றத்திற்கு அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
வரும் 13ம் தேதி இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை சமரச பேச்சுவார்த்தையை அடுத்து நீதிமன்ற விசாரணை தொடங்கும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…