அடி தூள்.! ‘குவா குவா’ சத்தத்துடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு முதலிடம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகளின் விவரங்களை யுனிசெப் வெளியிட்டுள்ளது.
  • நாடுகள் அடிப்படையில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

புத்தாண்டு தினத்தை நள்ளிரவு 12 மணிக்கு மக்களின் ஆரவாரத்துடன் உற்சாகமாக வாண வேடிக்கைகள் முழங்க புத்தாண்டு தினம் பிறந்தது. உலகம் முழுவதும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்த அதே நேரத்தில் ‘குவா குவா’ என்ற சத்தத்துடன் பிறந்த குழந்தைகளை குறித்த விவரங்களை யுனிசெப் வெளியிட்டுள்ளது.

அதில் வெளியிட்ட அறிக்கையில், 2020 புத்தாண்டை முன்னிட்டு உலகம் முழுவதும் 3,92,078 குழந்தைகள் பிறந்துள்ளன. நாடுகள் அடிப்படையில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 67,385 குழந்தைகளும், சீனாவில் 46,299 குழந்தைகளும் பிறந்துள்ளன. அடுத்தடுத்த இடங்களில் நைஜீரியா 26,039, பாகிஸ்தான் 16,787, இந்தோனேசியா 13,020 ஆகிய நாடுகள் உள்ளன.

மேலும் 2018-ம் ஆண்டில் குறை மாதத்தில் பிரசவம், சிக்கலான பிரசவம், தொற்று நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக, மொத்தம் 25 லட்சம் குழந்தைகள், பிறந்த ஒரு மாதத்திற்குள்ளாக இறந்துள்ளது. எனினும் மருத்துவத் துறையில் ஏற்பட்ட சிறப்பான முன்னேற்றங்கள் காரணமாக, ஒரே மாதத்தில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 47% சதவீதம் குறைந்துள்ளது என யுனிசெப் குறிப்பிட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

5 minutes ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

21 minutes ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

1 hour ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

2 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

2 hours ago

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

4 hours ago