புத்தாண்டு தினத்தை நள்ளிரவு 12 மணிக்கு மக்களின் ஆரவாரத்துடன் உற்சாகமாக வாண வேடிக்கைகள் முழங்க புத்தாண்டு தினம் பிறந்தது. உலகம் முழுவதும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்த அதே நேரத்தில் ‘குவா குவா’ என்ற சத்தத்துடன் பிறந்த குழந்தைகளை குறித்த விவரங்களை யுனிசெப் வெளியிட்டுள்ளது.
அதில் வெளியிட்ட அறிக்கையில், 2020 புத்தாண்டை முன்னிட்டு உலகம் முழுவதும் 3,92,078 குழந்தைகள் பிறந்துள்ளன. நாடுகள் அடிப்படையில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 67,385 குழந்தைகளும், சீனாவில் 46,299 குழந்தைகளும் பிறந்துள்ளன. அடுத்தடுத்த இடங்களில் நைஜீரியா 26,039, பாகிஸ்தான் 16,787, இந்தோனேசியா 13,020 ஆகிய நாடுகள் உள்ளன.
மேலும் 2018-ம் ஆண்டில் குறை மாதத்தில் பிரசவம், சிக்கலான பிரசவம், தொற்று நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக, மொத்தம் 25 லட்சம் குழந்தைகள், பிறந்த ஒரு மாதத்திற்குள்ளாக இறந்துள்ளது. எனினும் மருத்துவத் துறையில் ஏற்பட்ட சிறப்பான முன்னேற்றங்கள் காரணமாக, ஒரே மாதத்தில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 47% சதவீதம் குறைந்துள்ளது என யுனிசெப் குறிப்பிட்டுள்ளது.
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…