இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த கௌரவம்

இந்திய வம்சாவளி பெண் ரேணு கத்தோர் அமெரிக்காவின் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரேணு கத்தோருக்கு 61 வயது ஆகும்.உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இவர்அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் அரசியல், அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்தில் முதுகலை மற்றும் பி.ஹெச் .டி பட்டங்களை பெற்றுள்ளார்.இவர் ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தராகவும், பல்கலைக்கழக தலைவராகவும் இருந்து வருகிறார்.
அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமிக்கு ரேணு கல்வி துறையில் ஆற்றிய பங்களிப்பு காரணமாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து ரேணு கூறுகையில்,இது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி ஆகும்.எனது தலைமை திறன்களை வளர்ப்பதற்கு மதிப்புமிக்க வாய்ப்பை எனக்கு அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.