பிரபுதேவாவுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டதா!

Published by
Rebekal

பிரபுதேவாவுக்கு இரண்டாவது திருமணம் முடிந்து, தனது காதல் மனைவியுடன் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாதாரணமான நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராகவும், இந்திய அளவில் இயக்குனராகவும் பிரபலமான நடன கலைஞராகவும் வலம் வரக்கூடிய நடிகர் தான் பிரபுதேவா. இவர் கடந்த 1995ஆம் ஆண்டு ரமலத் என்னும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்களும் உள்ளனர்.   அவரது மூத்த மகன் கடந்த 2008ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார், அதன்பின் விஜய் உடன் நயன்தாரா வில்லு படத்தில் நடித்தபோது அந்த படத்தை பிரபுதேவா தான் இயக்கினார். அப்பொழுது நயன்தாராவுடன் அவருக்கு காதல் மலர்ந்ததால் தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்து கொண்டார்.

அதன் பின் நயன்தாராவுடன் சேர்ந்து வெளியில் எல்லாம் சென்று வந்தார். மேலும் இருவரும் காதலிப்பதும் சமூக வலைதளங்கள் மற்றும் திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இவருக்காக நயன்தாரா மதம் மாறி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாலும் சில காரணங்களால் இவர்களின் காதல் முறிந்து திருமணம் நடைபெறவில்லை. இவர்களுடைய காதலும் கடந்த 2012 ஆம் ஆண்டுடன் முடிந்து விட்டது. அதன் பின் பிரபுதேவா மிகவும் உடல் நலம் குன்றிய நிலையில் இருந்துள்ளார்.

அப்பொழுது  அவருக்கு பிசியோதெரபி டாக்டர் ஒருவர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அப்பொழுது அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபுதேவா அந்த பிசியோதெரபி டாக்டரை ரகசியமாக குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் இருவரும் வசித்து வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுகறித்து பிரபுதேவாவிடம் கேட்கும் பொழுது அவர் மறுப்பு தெரிவிக்கவும் இல்லை, அதை ஒப்புக் கொள்ளவுமில்லை உண்மை என்ன என்பது குறித்து அவர் தான் சொல்ல வேண்டும்.

Published by
Rebekal

Recent Posts

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

5 minutes ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

31 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

1 hour ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

11 hours ago