தீவிரவாதிகள் நடத்திய குண்டுவீச்சில் பலியான கேரள பெண் சவுமியா குடும்பத்தினருடன் இஸ்ரேல் அதிபர் பேச்சு…!

Published by
Edison

தீவிரவாதிகள் நடத்திய குண்டுவீச்சில் பலியான கேரள பெண் சவுமியாவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக,அவரது குடும்பத்தினருடன் இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின் நேற்று பேசியுள்ளார்.

ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை தடை விதித்தது.இதன்காரணமாக,இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து,பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு மத்தியில்,ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர்.இதற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் காசாவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.அதில்,ஒன்பது குழந்தைகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும்,இஸ்ரேல்-ஹமாஸ் போராளிக்களுக்கு இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.அப்போது,ஹமாஸ் போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் சவுமியா என்பவர் உயிரிழந்தார்.அவர்,கேரளா மாநிலம் இடுக்கியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுமியா கடந்த 7 ஆண்டாக இஸ்ரேலில் ஒரு வயதான பெண்ணை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.அவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.இரண்டு ஆண்டுக்கு முன் கேரளா வந்து சென்ற சவுமியா,இன்னும் இரண்டு மாதங்களில் கேரளா வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.இதனையடுத்து,அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் கடந்த சனிக்கிழமை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது.அதன்பின்னர் அங்கிருந்து கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில்,இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின்,நேற்று மாலை இடுக்கியில் உள்ள சவுமியா குடும்பத்தினரக்கு ஆறுதல் கூறுவதற்காக 20 நிமிடம் பேசியுள்ளார்.எனினும்,இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின் அவர்களுடன் நடத்திய உரையாடலின் விவரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. ஆனால், அதிபர் ருவன் ரிவ்லின் ஆலோசகர்,சவுமியா குடும்பத்தினருடன் அதிபர் பேசியதை உறுதிப்படுத்தினார்.

இதற்கு முன்னதாக,இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டாக்டர் ரான் மல்காவும், சவுமியா குடும்பத்தினருடன் ஆறுதல் கூறுவதற்காக கடந்த வாரம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

4 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

4 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

6 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago