தங்களது திருமணத்தை நடத்தி வைத்த கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து சினேகனின் மனைவி கன்னிகா தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜூலை – 29 திருமணம் செய்துகொண்டனர். சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கவிஞர் சிநேகனின் மனைவியும் நடிகையுமான கன்னிகா தனது டுவிட்டர் பக்கத்தில் தங்களது திருமணத்தை நடத்தி வைத்த கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ” என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வினை தாய் மாமன் இடத்தில் இருந்து நடத்திய எங்கள் குடும்பத்தின் மூத்தவர் உலக நாயகன் நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு. எங்கள் நன்றியும் அன்பும் கடைசி தலைமுறை வரை இருக்கும் பத்திரிக்கையில் இணையானவள் என்று எழுதிய என் இணையாளனுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…