பொன்னியின் செல்வன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ள லால் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது.அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
அது சமீபத்தில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் ,இன்னும் 20% படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது வெளியான புது தகவலின்படி , பொன்னியின் செல்வன் படத்தில் இயக்குனரும் நடிகருமான லால் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிலும் அவர் இந்த படத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . சண்டக்கோழி படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த லால் மலையாளத்தில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்பவர் என்பதும் , தற்போது இவர் தனுஷின் கர்ணன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் இவரது லுக் என்று கூறி புகைப்படம் ஓன்று வெளியாகி உள்ளது .அதில் வில்லன் என்றில்லாமல் அப்பாவி தோற்றத்தில் உள்ளார் .
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…