கர்ணன் படத்திற்கான இசைவெளியிட்டு விழாவில் நடிகர் யோகி பாபு சில முக்கியான விஷியங்களை கூறியுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன், நட்டி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று இந்த படத்திற்கான இசைவெளியிட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணன், பாடகி தீ, யுகபாரதி, யோகி பாபு, நடராஜன் நட்டி, கௌரி கிஷன் போன்ற பலர் கலந்துகொன்டுள்ளார்கள்.
இந்த விழாவில் பேசிய நடிகர் யோகி பாபு கூறியதாவது, ” இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் மாரி செல்வராஜ், தனுஷ், கலைப்புலி தாணு சார், அனைவருக்கும் மிக்க நன்றி படம் தொடங்கும்போதே என்னுடைய கதாபாத்திரம் குறித்து மாரி செல்வராஜ் சாரிடம் கேட்டேன். அதற்கு அவர் இது வரைக்கும் நீங்க காமெடிதான் பண்ணிட்டு இருந்தீங்க அதனால இந்த படத்துல உங்களுக்கு கதாபாத்திரத்தை மாத்தி பெரிய கதாபாத்திரம் கொடுத்து இருக்கிறேன் என்று கூறினார்.
என்னிடம் பரியேறும் பெருமாள் படத்தின் முழுக்கதையையும் கூறவில்லை இருந்தாலும் நான் அவரை நம்பி நடிக்க சென்றேன். இந்த படத்தின் கதையையும் அவர் என்னிடம் முழுவதுமாக கூறவில்லை. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நன்றாக பேசக் கூடியதாக இருக்கும். மாரிசெல்வராஜ் சார் ஊர் மக்களுக்கு மிகவும் நன்றி மழை வெயில் என்று பார்க்காமல் நடித்தார்கள்” என்று பேசியுள்ளார்.
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…