லேடி சூப்பர் ஸ்டாரயே மிஞ்சிய மாளவிகா மோகனன்.! சம்பளத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்.!

Published by
Ragi

மாளவிகா மோகனன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் பாலிவுட் படத்திற்காக 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகனன். கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் அவர் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மாளவிகா மோகனன் தற்போது பாலிவுட்டில் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை மறைந்த பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் Mom என்ற படத்தை இயக்கிய ரவி உதயவர் இயக்கவுள்ளார். மாளவிகா மோகனனுக்கு ஜோடியாக சித்தாந்த் சதுர்வேதி நடிக்கவுள்ளார்.இந்த படத்திற்காக மாளவிகா மோகனன் தொடர்ந்து 3 மாதங்கள் வரை கால்ஷீட் வழங்கியுள்ளதாகவும், இதற்காக அவர் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் ஒரே ஹீரோயின் நயன்தாரா என்று கூறும் நிலையில் தற்போது அவரையே மாளவிகா மோகனன் மிஞ்சி விட்டார். 15 ஆண்டுகள் சினிமாவில் இருந்து தற்போது தான் 3 அல்லது 4கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் ஒரே படத்தில் நடித்து விட்டு இரண்டாம் படத்திலே 5 கோடியா என்ற ஷாக்கில் உள்ளார்களாம் ரசிகர்கள். இருப்பினும் மாஸ்டர் நாயகியின் பாலிவுட் படத்தினை குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Published by
Ragi

Recent Posts

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

24 minutes ago

கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும் – தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

சிவகங்கை  : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

41 minutes ago

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் தொடக்கம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…

57 minutes ago

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

10 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

11 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

12 hours ago