லேடி சூப்பர் ஸ்டாரயே மிஞ்சிய மாளவிகா மோகனன்.! சம்பளத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்.!

Published by
Ragi

மாளவிகா மோகனன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் பாலிவுட் படத்திற்காக 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகனன். கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் அவர் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மாளவிகா மோகனன் தற்போது பாலிவுட்டில் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை மறைந்த பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் Mom என்ற படத்தை இயக்கிய ரவி உதயவர் இயக்கவுள்ளார். மாளவிகா மோகனனுக்கு ஜோடியாக சித்தாந்த் சதுர்வேதி நடிக்கவுள்ளார்.இந்த படத்திற்காக மாளவிகா மோகனன் தொடர்ந்து 3 மாதங்கள் வரை கால்ஷீட் வழங்கியுள்ளதாகவும், இதற்காக அவர் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் ஒரே ஹீரோயின் நயன்தாரா என்று கூறும் நிலையில் தற்போது அவரையே மாளவிகா மோகனன் மிஞ்சி விட்டார். 15 ஆண்டுகள் சினிமாவில் இருந்து தற்போது தான் 3 அல்லது 4கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் ஒரே படத்தில் நடித்து விட்டு இரண்டாம் படத்திலே 5 கோடியா என்ற ஷாக்கில் உள்ளார்களாம் ரசிகர்கள். இருப்பினும் மாஸ்டர் நாயகியின் பாலிவுட் படத்தினை குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Published by
Ragi

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

1 hour ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

3 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

3 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

5 hours ago