இந்தோனேசியாவை சேர்ந்த சினோவேக் தடுப்பூசி சோதனையின் முன்னணி பெண் விஞ்ஞானி நோவிலியா ஸ்ஜாஃப்ரி உயிரிழந்துள்ளார்.
அதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், கொரோனவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக பல நாடுகளிலும் தடுப்பூசி கண்டறியப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், இந்தோனேசியாவிலும் சினோவோக் தடுப்பூசி மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை கண்டறிவதற்கான சோதனைகளில் முன்னணி விஞ்ஞானியாக விளங்கிய நோவிலியா ஸ்ஜாஃப்ரி எனும் பெண் விஞ்ஞானி தற்பொழுது உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்பிற்கான காரணம் தெரியாத நிலையில், இவர் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் போன்ற நெறிமுறைகளின்படி புதைக்கப்பட்டதால் இவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தோனேசிய அரசுக்கு சொந்தமான மருந்து தயாரிப்பு நிறுவனம் பயோஃபர்மாவின் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், நோவிலியா ஸ்ஜாஃப்ரி எனும் பெண் விஞ்ஞானியின் மரணம் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு எனவும், தடுப்பூசியை கண்டறிவதில் மட்டுமல்லாமல், பல கண்டுபிடிப்புகளில் இவர் முன்னணித் தலைவராக இருந்ததாகவும் கூறி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…