தேவையான பொருட்கள்: இட்லி மாவு – இரண்டு கப், அரிசி மாவு – 1 ஸ்பூன், ரவை – 1 ஸ்பூன், வரமிளகாய் – 4, பூண்டு – 1 பல், உப்பு – 3/4 ஸ்பூன்.
செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில் வரமிளகாயை எடுத்து கொண்டு அதில் சுடுதண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மிக்சியில் பூண்டு மற்றும் ஊற வைத்த வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்து கொண்டு அதில் அரைத்து வைத்த இந்த கலவையை சேர்த்து அதனுடன் உப்பு, அரிசிமாவு மற்றும் ரவை சேர்த்து கொள்ள வேண்டும்.
இவற்றை நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் 10 நிமிடம் ஊற வேண்டும். அதனை அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் மாவை சிறிது போண்டாவாக போடுங்கள். பொன்னிறமாக வந்தவுடன் அதனை தட்டில் எடுத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் எளிமையான சுவையான குட்டி போண்டா ரெடி. இதனை டீ குடிக்கும் வேளையில் மொறு மொறு சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…