சிம்பு அடுத்ததாக மாநாடு உட்பட 4 படங்களில் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் நடந்து வந்தது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.
தற்போது ஊரடங்கு காரணமாக சிம்பு பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் திரிஷாவுடன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதனையடுத்து கௌதம் கார்த்திக் மற்றும் சிம்பு நடிப்பில் ‘மப்டி’ என்னும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஊரடங்கு முடிவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் சிம்புவின் அடுத்த படத்தை மிஷ்கின் இயக்க போவதாகவும், அந்த படத்தில் சிம்புவிற்கு வில்லனாக வைகை புயல் வடிவேலு நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்தது. அது மட்டுமின்றி சிம்புவின் வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் என்பவர் இயக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…