கொரோனா வைரஸ் தொற்றால் உலக வல்லரசு நாடு என கூறப்படும் அமெரிக்கா தற்போது மிகுந்த பாதிப்புள்ளாகி வருகிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பலரும் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்.
இதுவரை 5 கோடி பேர் தங்களது வேலையை இழந்துள்ளனராம். இதில் லட்சக்கணக்கான இந்தியர்களும் உள்ளனராம். வெளிநாட்டில் இருந்து அமேரிக்கா சென்று வேலைபார்ப்பவர்களில் 67 சதவீதத்தினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் வேலை செய்வதற்கு வெளிநாட்டினர் எச்.1.பி விசா எடுத்து 3 ஆண்டுகள் வரை வேலை செய்துகொள்ளலாம். அடுத்த 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம். வேலையின்றி அமெரிக்காவில் 60 நாள் மட்டுமே தங்கயிருக்க முடியும். அதற்க்குள் நாடு திரும்பிவிட வேண்டும். இந்த நீட்டிப்பு காலத்தை 90 நாட்களாக அதிகரிக்க தற்போது வேலை இழந்த இந்தியர்கள் அமெரிக்க அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் இதுவரை 5 கோடி பேர் வேலையிழந்துள்ளதை அடுத்து இம்மதத்திற்குள் அந்த எண்ணிக்கை 7 கோடியாக இருக்கும் எனவும், 2 ஆம் உலகப்போருக்கு பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு இதுதான் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…