மேகா ஆகாஷ் அடுத்ததாக ஏ. எல். விஜய் இயக்கத்தில் ஒரு ஆந்தலாஜி படத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதனையடுத்து சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவுடன் போம்ராங், தனுஷூடன் எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் Lie, Chal Mohan Ranga ஆகிய படங்களிலும், பாலிவுட்டில் Sooraj Pancholi என்ற படத்தின் மூலம் கடந்தாண்டு அறிமுகமானார் மேகா. அடுத்ததாக பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் ராதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மேகா ஆகாஷ் தமிழில் அடுத்ததாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ஏ. எல். விஜய் இயக்கும் ஒரு ஆந்தலாஜி படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளதாகவும், இதன் 4 நாட்களுக்கான படப்பிடிப்புகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைப்பெற்றதாக கூறியுள்ளார். ஏ. எல். விஜய் தற்போது தலைவி என்னும் திரைப்படத்தின் ரிலீஸ்க்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…