நீங்கள் யார் தலையிட???விதிகளை மீறி விட்டீர்கள் பாம்பியோ… சீனா கொதிப்பு

Published by
kavitha

அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் பேச்சுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ,இந்தியா இடையே பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையிலான 2+2 பேச்சுவார்த்தையானது நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்க அமெரிகாவில் இருந்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2+2 பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேசுகையில் இந்திய இறையாண்மையை காப்பதற்காக இந்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா துணைநிற்கும் என்றும் அதிரடியாக தெரிவித்ததோடு எல்லை மற்றும் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவை  கடுமையாக சாடினார்.

மைக் பாம்பியோவின் இந்த பேச்சுக்கு  சீனா தரப்பில் சர்வதேச, அடிப்படை தூதரக உறவுகளுக்கான விதிமுறைகளை மீறிய மைக் பாம்பியோவின் பேச்சு என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

மேலும் எல்லை விவகாரம் இந்தியா, சீனாவுக்கு இடையிலானது என்றும், இதில் மூன்றாம் தரப்பு தலையிட இடம் கொடுக்கப்படாது என்று சீன தூதரகம் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்கா பழைய பொய்களையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டு வருக்கிறது. எல்லை விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யும் திறன் இரு நாடுகளுக்கும் உள்ளது.

கொரோனா விவகாரத்தில் உலக மக்களை சீனாவுக்கு எதிராக அமெரிக்க திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டிய சீனா கொரோனா பரவலை தடுப்பதில் சீனா மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Recent Posts

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

33 minutes ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

1 hour ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

1 hour ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

2 hours ago

போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்த‌த்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!

அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…

2 hours ago