ஆஸ்திரேலியாவில் சமூக இடைவெளியை பின்பற்றாத மந்திரி! நேற்று ராஜினாமா!

Published by
லீனா

ஆஸ்திரேலியாவில் சமூக இடைவெளியை பின்பற்றாத மந்திரி, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மற்ற நாடுகளை தாக்க துவங்கியது. இந்த கொரோனா வைரஸால் உலக அளவில், இதுவரை 3,220,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 228,224 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அமெரிக்காவில் தான் இந்த வைரஸ் நோயால் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு, இந்த நோயால் பலியானாரின் எண்ணிக்கை 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் கண்டிப்பாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும், வெளியில் வரும் போது, கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிரேவர் வாட்ஸ் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் காவல்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு இலாகாவின் நிழல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சட்டமன்ற தொகுதியான வடக்கு டூம்பாவோ நகரின் விரைவு வழிச்சாலையில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் போது, அவரும் 2 போலீஸ் அதிகாரிகளும் கொரோனா ஊரடங்கையொட்டி மாகாண அரசு பிறப்பித்திருந்த சமூக இடைவெளி கட்டாயம் என்கிற உத்தரவை மீறியதாக கூறப்படுகிறது.

இவர்களது இந்த செயல் ஆஸ்திரேலியாவில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், டிரேவர் வாட்ஸ் உள்ளிட்ட மூவருக்கும் தலா 1,334 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் ( இந்திய மதிப்பின்படி ரூ.67 ஆயிரம்) விதிக்கப்பட்டது. பின்னர் மந்திரியே அரசின் விதிமுறைகளை மீறியதால், அவர் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, டிரேவர் வாட்ஸ் தனது மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.  டிரேவர் வாட்ஸ் பதவி விலகியதையடுத்து, அவருக்குப் பதிலாக டான் புருடி என்பவர் காவல்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு நிழல் மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

1 hour ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

7 hours ago