கேரளாவில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல்
நடிகர் விஜய்க்கு தமிழகத்தையும் தாண்டி கேரளாவிலும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். கேரளாவிலும் விஜயின் படங்கள் அதிகம் வசூல் செய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் கேரளாவில் முதல் நாளில் மட்டும் 2 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில், கேரளாவில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல் வெளியீடபட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் நடிகர் மோகன் லால் நடிப்பில் கடந்த 2018- ஆம் ஆண்டு வெளியான “ஒடியன்” திரைப்படம் உள்ளது. இந்த படம் கேரளாவில் முதல் நாளில் மட்டும் 7 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இரண்டாவது இடத்தில் மோகன் லால் நடிப்பில் கடந்த 2019- ஆம் ஆண்டு வெளியான “லூசிபர்” திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் 6.70கோடி வசூல் செய்தது. இந்த பட்டியலில் முதல் இரண்டு இடத்திலும் மோகன் லால் படங்கள் இடம்பெற்றுள்ளது.
மூன்றாவது இடத்தில் 2018 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான “சர்க்கார்” திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் 6.62 கோடி வசூல் செய்துள்ளது.
நான்காவது இடத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2017- ஆம் வெளியான “மெர்சல்” திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் 6.11கோடி வசூல் செய்துள்ளது.
ஐந்தாவது இடத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் 2.4 கோடி வசூல் செய்துள்ளது.
இதில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் மற்றும் சர்கார் திரைப்படங்கள் தமிழில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…