பிரபல நடிகையான பூர்ணாவிடம் 1 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கேரளாவை சேர்ந்த 4 இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2008ம் ஆண்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூர்ணா. அதனையடுத்து தமிழ் உட்பட பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக சூர்யாவின் காப்பான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஏ. எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி என்ற ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த சரத், அஷ்ரப், ரபீக் மற்றும் ரமேஷ் ஆகிய நான்கு இளைஞர்கள் பூர்ணாவிடம் ஒரு லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், இல்லையென்றால் பூர்ணா அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவோம் என்று மிரட்டியதோடு, அவரது புகைப்படங்களை எடுக்க வீட்டின் அருகே வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பூர்ணாவின் தாயார் போலீஸில் புகார் செய்ததை அடுத்து நால்வரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நடிகையிடமே பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…