இங்கிலாந்தில் லண்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் ஒரு தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா காலத்தில் புகைபிடிப்பதை விட்டுள்ளார்கள் என கூறப்படுகிறது.
இந்த ஆய்வு ஏப்ரல் மாதத்தின் மத்தியில் இருந்து ஜூன் மாதம் இறுதி வரை நடத்தப்பட்ட காலகட்டத்தில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 16 முதல் 29 வயது வரையிலான 400,000 பேரும், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 240,000 பேரும் . 30-49 வயதுடைய 400,000 பேரும் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட்டனர் என கூறப்படுகிறது.
மேலும், இந்த ஆய்வில் 440,000 பேர் புகை பிடிப்பதை கைவிட முயற்சி செய்துகொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.30 வயதிற்குட்பட்டவர்கள் பப்கள் மற்றும் மதுக்கடைகளில் நண்பர்களுடன் இருக்கும்போது புகைபிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இளைஞர்களைப் பொருத்தவரை பெற்றோரிடமிருந்து தங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை மறைத்து புகைப்பிடிப்பார்கள் ஆனால், ஊரடங்கு காரணமாக அவர்கள் குடும்பத்துடன் இருக்க வேண்டிய சூழல் வந்ததால் புகைபிடிப்பதை கைவிட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும், புகைபிடிப்போரின் எண்ணிக்கை புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட்டவர்களின் விட ஐந்து மடங்கு அதிகம் என்ற உள்ளது என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…