எனது நன்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என கொரோனாவிலிருந்து மீண்ட தமன்னா உருக்கமாக மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகம் முழுவதுமே அதிகரித்து தான் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த கொரோனா தொற்றால் தமிழகத்தில் அதிக அளவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அரசியல்வாதிகள், நடிகர்கள் என முக்கியமானவர்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். பலர் உயிரிழந்துள்ளனர், இந்நிலையில் அண்மையில் தமிழ் திரையுலக முன்னணி நடிகை தமன்னா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை கவனித்துக் கொண்ட மருத்துவர்களுக்கு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நான் உங்களுக்கு எவ்வளவு நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும், அதிகளவில் நோய்வாய்ப்பட்டு பலவீனமாகவும், பயத்துடனும் இருந்தேன். எனக்கு நான் வசதியாக இருப்பதாக உணர வைத்த உங்களது சிகிச்சையும் உங்களது அன்பும், நேர்மையான அக்கறையும் என்னை குணமாக்கியது. எனவே உங்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி என அவர் தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…