குழந்தைக்கு அப்பாவாகும் செய்தியை தனது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷலாக நகுல் ஜெய்தேவ் அறிவித்துள்ளார்.
2008ல் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நகுல் ஜெய்தேவ் . அதில் ஹீரோயினாக சுனைனா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அடுத்த ஆண்டில் அவருடன் மாசிலாமணி படத்திலும் நடித்தார். அதனையடுத்து தமிழ் சினிமாவில் அறியப்படும் கதாநாயகனாக திகழ்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 10 வருடங்கள் கழித்து மீண்டும் சுனைனாவுடன் இணைந்து ‘எரியும் கண்ணாடி’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தினம் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடிய நகுல் தான் அப்பாவாகும் செய்தியை அறிவித்துள்ளார். நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வருட பிறந்தநாள் தனக்கும், அவரது மனைவியான ஸ்ருதிக்கும் மிகவும் ஸ்பெஷல் என்றும், இறுதியாக தனது மனைவி ஒரு குழந்தைக்கு அம்மாவாக போவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று அறிவித்துள்ளார். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் 2016ல் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பலர் இந்த தம்பதியருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே…
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…