3 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் ‘நரகாசுரன்’.! ஒரு வழியா ரிலீஸ் குறித்து முடிவு செஞ்சிட்டங்க போல.?

Published by
Ragi

3 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் கார்த்திக் நரேனின் நரகாசுரன் படத்தினை ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் இளம் வயதில் இயக்குனராக அறிமுகமானவர்களில் கார்த்திக் நரேனும் ஒருவர். தன்னுடைய 22வது வயதில் 2016ல் வெளிவந்த துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இரண்டாவது படமாக நரகாசூரன் படத்தை எடுத்து முடித்துவிட்டார். ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அப்படம் வெளியாகாமலேயே உள்ளது.

கௌதம் மேனன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள நரகாசுரன் படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண்,ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.பொருளாதார பிரச்சினைகளால் இன்னும் ரிலீஸாகமல் உள்ள நரகாசுரன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.அதாவது கார்த்திக் நரேன் இரண்டாவதாக இயக்கிய நரகாசுரன் படத்தினை ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது கார்த்திக் நரேன் தனுஷின் D43 படத்தினை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

8 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

8 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

9 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

10 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

10 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

11 hours ago